செய்திகள்

150,000 த்தை தொட்டது தங்கம் விலை!

Published

on

இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவை எட்டியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 கரட் தங்கம் 51,600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், 22 கரட் தங்கம் 48,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த ஆண்டு இலங்கை சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124000 ரூபாவை கடந்திருந்தது. இலங்கையில்,கொவிட் தொற்று நிலைமை தீவிரமடைய ஆரம்பித்ததாலே, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. பொருளாதார நெருக்கடி நிலையில், தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக அறிய வருகிறது.

சந்தையில் தற்போது ஒரு பவுண் நகை வாங்க வேண்டுமானால், செய்கூலி உட்பட ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவரை செல்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version