செய்திகள்

டில்லி பறந்தார் பஸில்!

Published

on

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று பிற்பகல் இந்தியத் தலைநகர் புதுடில்லி நோக்கிப் பயணமானார்.

நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்துள்ளார்.

இந்தியாவுடனான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நோக்கில் அவர்இந்தியா சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடன் மூலம் இலங்கைக்கு அரிசி, கோதுமை மா மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்காக இந்திய அரசு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version