செய்திகள்

நாளைமறுதினம் ஜனாதிபதி விசேட உரை!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளைமறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய மற்றும் தனியார் ஊடகங்களில் குறித்த உரை ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும்.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன.

நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், மக்களுக்கான சில சலுகைகள் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது .

அதேவேளை, ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடும் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரமுகர்களும் இலங்கை வந்துள்ளனர். இவ்வாறான பின்புலத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது .

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version