செய்திகள்

கோட்டா – சம்பந்தன் நேரடிப் பேச்சுக்கு மஹிந்த வரவேற்பு!

Published

on

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நேரடிப் பேச்சை நான் வரவேற்கின்றேன்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதைப் பெற வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன்தான் அது குறித்துப் பேச வேண்டும். அப்போதுதான் கிடைக்கக் கூடியவற்றை அவர்கள் பெறலாம்.

அப்படிப் பேச்சு நடத்த அவர்கள் முன்வந்திருப்பது நல்லது. அந்த நேரடிப் பேச்சை நான் வரவேற்கின்றேன்” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version