செய்திகள்

நாட்டுக்காக எந்த தியாகமும் செய்ய தயார்! – கூறுகிறார் தயாசிறி

Published

on

நாட்டை மீட்டெடுக்க எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நாம் தயார். தேவையான நேரத்தில் பதவிகளை துறந்துவிட்டு, மக்களோடு மக்களாக வீதியில் இறங்கி போராடுவோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசில் நாம் அங்கம் வகித்தாலும் பங்காளிக்கட்சிகளுடனான எமது அரசியல் நடவடிக்கை தொடரும். நாம் எவரையும் கைவிடவில்லை.

தேவையான நேரத்தில் பதவிகளை துறந்துவிட்டு, போராட தயார். எவரினதும் வாலாக இருக்க நாம் விரும்பவில்லை. எதிர்காலத்தில் பலமான கூட்டணி அமைக்கப்படும்.” – என்றும் தயாசிறி குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version