செய்திகள்

எதிரணிக்கு பதிலடி கொடுக்க தெரியும்! – ஜோன்ஸ்டன் எச்சரிக்கை

Published

on

எதிரணியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட அவர்,

” அமைச்சர்களின் வீடுகளை சுற்றிவளைப்பதற்கு ஹிருணிகா அழைப்பு விடுத்திருந்தார். அதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையத்துக்கே சிறிய கூட்டமொன்றை அனுப்பிவைத்தோம்.

எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எங்களுக்கும் பதிலடி கொடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.” – என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது முட்டைவீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version