செய்திகள்

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு!

Published

on

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை விரைவில் அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை உச்சம் தொட்டுள்ளது.

இதனால் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன எனவும், இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் அறியமுடிகின்றது.

சமையல் எரிவாயுவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதால், விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு, அரசிடம், நிறுவனங்கள் அனுமதி கோர வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

” தாங்கிக்கொள்ள முடியாத அளவு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் அதில் அரசு தலையிடும்” – என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version