செய்திகள்

ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரை பயன்படுத்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி

Published

on

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு பகுதியில்

கஞ்சா மதுபோதையில் வந்த நபரொருவர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்திய நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் புகுந்து தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

தாக்குதலை தடுக்க முயன்ற பிரதேசசபை உறுப்பினரின் தந்தையையும் கீழே தள்ளி தாக்கியுள்ளார்.

அத்ததுடன் வீட்டின் கேற்றையும் வேலி தகரங்களையும் சேதமாக்கி வீட்டிலிருந்த பெண்களையும் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் குழப்பநிலை தோன்றியுள்ளது .

சம்பவம் தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version