செய்திகள்

ரஞ்சன் விவகாரம்! – சர்வதேச நாடாளுமன்றை நாடுகிறது எதிரணி

Published

on

ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.

ஜெனிவாவில் வைத்து இருவரும் வெளியிட்டுள்ள காணொளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அவரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஜெனிவா வந்துள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.

அத்துடன், சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும். மேற்படி அமைப்புகளுடன் இலங்கைக்கு உடன்படிக்கைகள் உள்ளன. எனவே, அதன்பிரகாரம் செயற்பட வேண்டிவரும். ரஞ்சனுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு.” – என்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version