செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம்! – இன்றும் கையெழுத்து வேட்டை

Published

on

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திருநெல்வேலியில் இடம்பெற்றிருந்தது.

திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் கலந்து கொண்டதுடன் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version