செய்திகள்

ஹன்டர் – மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் பலி

Published

on

ஹன்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நெல்லியடி – வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 12.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் துன்னாலை கோவில் சந்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்தார்.

ஹன்டர் வாகனம் வீதியில் பயணித்த வேளை, எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், தனது கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்தில் பயணித்த வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version