செய்திகள்

சிமெந்து, பால்மா வரிகள் நீக்கம்!

Published

on

சிமெந்து மற்றும் பால்மா ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வாய்மொழி வினாவுக்கு பதிலளித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பால்மா, சிமெந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் விரைவில் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும்.

இதேவேளை விரைவில், பால்மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் அரிசி, சீனி, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலையில் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையும் உண்மையே. இருப்பினும் தற்போது நாட்டில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

எதிர்வதும் 7ம் திகதி ஹம்பாந்தோட்டையில் திறக்கப்படவுள்ள சிமெந்து தொழிற்சாலை மூலமாக மூன்று மில்லியன் சிமெந்து மூடைகள் மாதமொன்றுக்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும். அத்துடன் சிமெந்து இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை நீங்குவதற்கும், சிமெந்து வரியை நீக்குவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version