செய்திகள்

சொதப்பலான துடுப்பாட்டம் – தொடரை இழந்தது இலங்கை!!

Published

on

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் சொதப்பலான துடுப்பாட்ட வரிசையால் தோல்வியடைந்ததுடன் தொடரையும் இழந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக அதிகபட்சமாக ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கேன் ரிச்சர்ட்சன் மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

121 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

அதனடிப்படையில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற ரீதியில் அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

#SportsNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version