செய்திகள்

இலங்கைக்கெதிராக கொந்தளிக்கும் இராமேஸ்வரம் மீனவர்கள்!!

Published

on

தமிழக மீனவர்களிற்கெதிராக செயற்படும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

15 நாட்களில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிட்டால் தங்களது அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரததில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களையும் அவர்களது மூன்று விசைப்படகுகளையும், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும்,தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதை நிறுத்த வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#WorldNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version