செய்திகள்

சபாநாயகர்,பிரதமர்,எதிர்க்கட்சித்தலைவர் இல்லாமல் பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்!!

Published

on

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற அலுவல்கள் குழு இன்று (07) கூடியது.

இக்குழு கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் சபாநாயகர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அவசரமான கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என பாராளுமன்ற தகவல்கள் ​தெரிவிக்கின்றன.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version