செய்திகள்

வேலை நிறுத்த போராட்டத்தில் தாதியர்!

Published

on

நாளைய தினம் திங்கட்கிழமை அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ,

பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன் வைத்து இடம்பெறவுள்ள இப் போராட்டமானது தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version