செய்திகள்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்! – ஏ9 வீதியை முடக்கி மீனவர்கள் போராட்டம்

Published

on

யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்போது மாவட்ட செயலகத்தின் இரண்டு பிரதான வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்னால் மாவட்ட செயலகத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியையும் மறித்தும் போராட்த்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version