செய்திகள்

நிலவுடன் மோதும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!!

Published

on

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் கடந்த 2015ஆம் ஆண்டு பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட்டை ஏவியிருந்தது.

அந்த ராக்கெட் தனது பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் வழியிலேயே கைவிடப்பட்டது.

இந்த நிலையில் விண்வெளியில் கைவிடப்பட்ட பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் நிலவில் மோத இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி அளவில் நிலவின் மீது குறித்த ராக்கெட் மோதி வெடிக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேராசிரியர் மாக்டெவல் கூறும்போது,

பல சகாப்த காலங்களில் கிட்டத்தட்ட 50 பெரிய விண்வெளி பொருட்கள் கண்காணிக்க முடியாமல் போயுள்ளது. தற்போது பால்கன் ராக்கெட் நிலவில் மோதுவது உறுதிப்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இருக்கலாம்.

நிலவின் மீது முதல் ராக்கெட் சிறிய பள்ளத்தை ஏற்படும் தற்போது விண்வெளியில் சுற்றி திரியும் குப்பைகள் அரிதாகவே மோதி வருகின்றன.

இதனால் இப்போது எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கலாம் .அதனால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலவில் ராக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறிதாகவே இருக்கும் என்றார்.

#World

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version