செய்திகள்

24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று!

Published

on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாத் தொற்றால் மேலும் 627 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 3 இலட்சத்து 47 ஆயிரத்து 443 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 21 இலட்சத்து 05 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

10 கோடியே 30 இலட்சம்பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாகவும், சிறார்களுக்கு 4 கோடியே 42 இலட்சம் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version