செய்திகள்

நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது!

Published

on

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் பிரியத் பண்டு தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டால் நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், குடிதண்ணீர் விநியோகத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு பிரதேசத்திலும் மின் தடை ஏற்பட்டால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு மின்சாரம் வழங்குவதற்கு சபை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

மேற்கூறியவாறு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டால் அந்த நேரத்தில் விநியோகத்திற்காக தண்ணீரை சேகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நீர் விநியோகத்தை துண்டிக்கும் நிகழ்வு இடம்பெறும் என தாம் நினைக்கவில்லை எனவும், நீண்டகாலமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மின்சார சபை இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version