செய்திகள்

பீட்சா போல விற்கப்படும் துப்பாக்கிகள்!!

Published

on

வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்வது போல பாகிஸ்தானில் துப்பாக்கிகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கராச்சியில் துப்பாக்கி வாங்கிய நபர் ஒருவர் இதுகுறித்து சாமா டிவிக்கு அளித்த பேட்டியில்,

டீலர் மூலம் தொடர்புகொண்டு துப்பாக்கி வேண்டும் என்று தெரிவித்தால் கைபர் மாகாணத்தில் இருந்து பீட்சா போல் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டது. என தெரிவித்துள்ளார்.

டெலிவரி செய்வதற்கு முன் லைசென்ஸ் கூட கேட்பதில்லை. ஒட்டுமொத்த பேச்சுவார்த்தையும் போன் மூலமாகவே நடைபெறும். நான் முன்பணமாக பத்தாயிரம் ரூபா அனுப்பினேன்.

துப்பாக்கி டெலிவரி செய்த பின் நன்றாக பரிசோதித்து சரியாக வேலை செய்கிறது என்பதை உறுதி செய்த பின் மீதமுள்ள 28 ஆயிரம் ரூபாவை செலுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

இரண்டு நெட்வொர்க் மூலமாக துப்பாக்கி விற்பனை நடைபெறுகின்றது. முதலில் துப்பாக்கி விற்பனை செய்யும் டீலர் அதன்பின் டெலிவரி செய்யப்படும் குரூப் என இயங்குகின்றது.

எம்எம் துப்பாக்கி, ஏகே 47 ரக துப்பாக்கி வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

#WORLD


You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version