செய்திகள்

கட்டாத வீட்டுக்குக் காசு கேட்டு வீடமைப்பு அதிகார சபை கடிதம்!!

Published

on

இதுவரை வீடு ஒரு கல்வீட்டையே கண்டிராத மக்களுக்கு வீட்டுக் கடன் நிலுவையை செலுத்துமாறு வீடமைப்பு அதிகார சபை எழுத்துமூலம் அறிவித்த சம்பவமொன்று பிங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது.

பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பத்திற்கு குருநாகல் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து இவ்வாறு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிராமத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டும் என எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடன் பெறும் நோக்கத்துடன் பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த போதும் இதுவரை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து நடைபெறவில்லை என அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.




You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version