செய்திகள்

காணாமல் போன வல்வை மீனவர்கள் கண்டுபிடிப்பு!

Published

on

மீன் பிடிப்பதற்காக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம்(21) காலை மீன்பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காரூபன் (வயது 37), தவராசா சுதர்சன் (வயது 41) ஆகிய இருவரும் கடலுக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் நேற்று(22) வரை கரை திரும்பாத நிலையில், குடும்பத்தாரால் பொலிஸ் நிலையத்திலும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டது.

ஏற்கனவே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கும் இது குறித்த தகவல் வழங்கப்பட்ட நிலையில், மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் கரையிலிருந்து சென்ற மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கரையில் உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில், குறித்த மீனவர்கள் நிலைகொண்டுள்ள கடலின் தொலைவின்படி அவர்கள் இருவரும் கரை திரும்ப எட்டு மணிநேரம் ஆகலாம் என்று தெரியவந்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version