செய்திகள்

தொடர்ந்து நீடிக்கப்படும் இந்திய மீனவர் விளக்கமறியல்!!!

Published

on

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த 13 மீனவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் மூன்றாவது தவணையாக குறித்த வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டார்.
#localNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version