செய்திகள்
உயிர்த்த ஞாயிறு விசாரணைகளில் நம்பகத்தன்மை இல்லை! – சஜித் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் இடம்பெறவில்லை. இது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் கபில நாகந்தலவின் ஏற்பாட்டில் ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, பொரளை பகுதியில் தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பிலும் தமக்கு சந்தேகம் இருப்பதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
You must be logged in to post a comment Login