செய்திகள்

கட்டுநாயக்கவிற்கு வந்த புதிய நடைமுறை!!

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி  தெரிவித்தார்.

இதன்பிரகாரம் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்திலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் .

சலுகை பெற்ற உயரதிகாரிகள் மட்டுமே முனையத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் உட்பட சாதாரண மக்கள் அந்த வளாகத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

விமான நிலையத்தில் வருகை தருபவர்களை வரவேற்க வேண்டுமானால், விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் அல்லது மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version