செய்திகள்

மர்மமான முறையில் கல் வீச்சுத் தாக்குதல்கள்: பீதியடையவைக்கும் மாயம்

Published

on

பாணந்துறை டிப்பெத்த கிராமம் பொதுமயானமொன்றின் அருகாமையில் அமைந்துள்ளது .கிராமத்தில் ஒரு மாத காலமாக மர்மமான முறையில் கல் வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாக மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிராம மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகித்துக்கொள்வதாகவும், இதுவரையில் தாக்குதல்களை யார் மேற்கொள்கின்றனர் என கண்டறியவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

அண்மைய நாட்களிலிருந்து மதுபான போத்தல்களினாலும் தாக்குதல் நடாத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலில் வீட்டுக் கூரைகள் சேதமடைந்துள்ளன. சில சமயங்களில் கற்களில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கிராம மக்கள் சென்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் போது வேறு ஒரு பக்கத்திலிருந்து கற்கள் வீசப்படுவதாகவும். மக்கள் வீடுகளில் இருக்கின்றார்களா இல்லையா என்பது தெரிந்தவர்களே தாக்குதல் நடாத்துவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தாக்குதல் நடாத்தப்படுவதனால் மக்கள் பெருமளவில் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version