செய்திகள்

உழவு இயந்திர சில்லுக்கு சிக்கி குடும்பஸ்தர் மரணம்!

Published

on

இரண்டு சக்கர உழவு இயந்திரத்தை பயன்படுத்தி தோட்ட நிலத்தை உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் தோட்ட நிலத்தை உழுதுகொண்டிருந்த போது உழவு இயந்திரம் புரண்டுள்ளது. இந்த நிலையில் உளவு இயந்திர சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான புத்தூர் – கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version