செய்திகள்
சந்தையில் வெடிகுண்டு மீட்பு! – விசாரணைகள் ஆரம்பம்
இந்தியா – புதுடெல்லியின் எல்லைப்புர பகுதியில் அமைந்துள்ள காசிப்பூர் – மண்டி சந்தையில் அநாதரவாக காணப்பட்ட பை ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த சந்தை பூக்கள், காய்கறி, மீன் மட்டும் இறைச்சி என அனைத்தையும் கொண்டமைந்த சந்தைப் பகுதியாகும்.
இந்த நிலையில், குறித்த பை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் அந்த பை சோதனையிடப்பட்டது.
சோதனையின் போது குறித்த பையில் வெடிகுண்டு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு செயலிழக்கும் பிரிவினரால் எவ்வித சொந்தமுமின்றி குண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியது.
வெடிபொருட்கள் சட்டத்தின்கீழ் குறித்த சம்பவம் தொடர்பில் டெல்லி பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சிறிய அளவானது எனினும், இந்தியாவின் குடியரசு தின விழா வர உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டடமை பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login