செய்திகள்

சீனாவில் கல்விகற்கும் இலங்கை மாணவர்களுக்கு முன்னுரிமை!!!

Published

on

சீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தாம் முன்னுரிமை வழங்குவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வாங்க் யீ உறுதியளித்தார்.

இன்று (09) சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வாங்க் யீ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.

தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்களுக்கு சீனாவிற்கு வருகைத்தருவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வேங்க் யீ அவர்கள்,

இலங்கையின் மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் அங்கு வருகைத்தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு உடனடியான அறிவுறுத்தினார்.

சீனாவின் மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்த 400 மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 1200 இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களுக்கு மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு முடியாது போயுள்ளது.

பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்தார்.
#SrilankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version