செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு

Published

on

அரச ஊழியர்களுக்கும் இம்மாதம் முதல் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

இலங்கையில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 450 அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

6 லட்சத்து 66 ஆயிரத்து 480 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும். சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகமாக 1000 ரூபா வழங்கப்படும். அவர்கள் தற்போது 3 ஆயிரத்து 500 ரூபாவை மாதாந்தம் பெறுகின்றனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் மாதாந்தம் 15 கிலோ கோதுமைமா மானிய நிலையில் வழங்கப்படும். ஒரு கிலோவுக்கு 40 ரூபா குறைக்கப்பட்டு, கிலோ 80 ரூபா வீதம் வழங்கப்படும்.

புதிதாக எந்த வரியையும் அறவிடமாட்டோம்.” – என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version