செய்திகள்
சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகம் இடைநிறுத்தம்!
சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் முறையிலேயே இம்முறைகேடு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைகேட்டை தவிர்ப்பதற்காக சாரதி அனுமதிப் பத்திரங்கள், சாரதி பயிற்சி முடிந்த அன்றே வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login