செய்திகள்

மொட்டு கட்சியின் பதிலடி!

Published

on

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த கட்சியுடன் இணைந்தாலும் அது பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தடையாக இருக்காது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜே.வி.பியுடன் இணைவதாக கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த கொவிட் தொற்று காலங்களில் அதனை எதிர்கொள்ளவும் கட்டுப்படுத்தவுமே பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்தமையால் சுபீட்சமான எதிர்கால கொள்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திரக்கட்சி எம் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அவர்கள் எந்த கட்சியுடன் இணைந்தாலும் அது எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version