செய்திகள்

இலங்கை அரசை கண்டித்து இந்திய மீனவர்கள் போராட்டம்!

Published

on

இந்திய மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இவ்வாறு உண்ணாவிரத போராட்ட்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 68 இந்திய மீனவர்களையும், அவர்களின் 10 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள மீனவர்களை விடுதலை செய்யாத பட்சத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

அத்தோடு இவர்கள் இலங்கை அரசின் செயற்பாட்டையும் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version