செய்திகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவர் அதிரடியாக நீக்கம்!

Published

on

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவரை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்குவதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவருமே கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியும், சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான காரைநகர் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட கட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து விலக்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இன்று இடம்பெற்ற காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தவர்.

அத்துடன் வரவு-செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகும் இம்முறை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version