செய்திகள்

முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Published

on

வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவிற்கு நீதி கோரி நேற்றைய தினம் முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய பின்னர் சட்ட விரோதமான முறையில் கருகலைப்பு செய்ய முற்படுகையில் ஏற்பட்ட அதிக இரத்த பெருக்கால் சிறுமி உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமிக்கு நீதி கோரி மூங்கிலாறு கிராமத்தின் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் என பலரும் இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

15 ஆம் திகதி காணாமல் போன சிறுமி கைவிடப்பட்ட தனியார் காணியொன்றில் இருந்து 4 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version