செய்திகள்

காத்தான்குடியில் ஐஸ் வைத்திருந்த நபர் கைது!

Published

on

காத்தான்குடி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காத்தான்குடி 6 ஆம் பிரிவினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபரிடம் இருந்து 64.286 மில்லி கிராம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version