செய்திகள்

நிவாரணப் பொதி விநியோகிக்கும் சதொச!!

Published

on

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 பிரதான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி 1,998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

குறித்த நிவாரணப் பொதி விநியோக நடமாடும் சேவை இன்று முதல் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பில் , வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பந்துல குணவர்த்தன உரையாற்றுகையில் , பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய விற்பனை நிலையங்களை காட்டிலும் சதொச விற்பனை நிலையத்தில்அத்தியாவசிய பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படுகின்றன .

பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரண அடிப்படையில் வழங்க அரசாங்கம் பல திட்டங்களை இதுவரை காலமும் சதொச நிறுவனம் ஊடாக முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு 8 பிரதான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப்  பொதியை 1998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பொருட்களை வாங்கும்போது 95 ரூபா பெறுமதிமிக்க பப்படம் பொதியொன்று இலவசமாக வழங்கப்படவுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version