செய்திகள்

மஹரகமவில் ஓடும் விடுதலைப் புலிகளின் வண்டி!

Published

on

மஹரகமவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய வண்டியை ஒருவர் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரில் உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட வண்டி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போது உரிமையாளரிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளது.

2009 முதல் 2018 வரையிலும் குறித்த ஜீப் வண்டி கராஜில் இருந்துள்ளது. தற்போது அந்த வாகனத்தின் மூன்றாவது உரிமையாளர் சகல ஆவணங்களையும் காண்பித்து குறித்த ஜீப் வண்டியை பெற்றுக் கொண்டுள்ளார்.

கபில புலத்கே என்பவரே தற்போது குறித்த வண்டியை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த ஜூப் வண்டியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version