செய்திகள்

யானை தாக்கியதில் ஒருவர் பலி!

Published

on

மோட்டார் சைக்கிளில் சென்ற பூப்பந்தாட்ட நடுவர் ஒருவரை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி செல்லும் போது வீதியை கடக்க முற்பட்ட காட்டு யானை தாக்கியுள்ளது.

சிவபாலசுந்தரம் மயூரன் என்ற 37 வயதுடைய நபரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version