செய்திகள்

மீண்டும் பாரிய போராட்டம் : எச்சரிக்கும் ஆசிரியர் சங்கம்..!!

Published

on

ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வட மாகாண அதிபர்கள், ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகையில் சம்பள முரண்பாடு மற்றும் அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சுற்றறிக்கை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் 6 மாத காலத்துக்குள் தீர்வு வழங்குவதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version