செய்திகள்

வரட்சியில் கென்யா: மனதை கலங்க வைக்கும் புகைப்படம்!!

Published

on

சமூக வலைதளங்களில் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துகிடக்கும்  புகைப்படமொன்று மனதை பதைக்க வைக்கும் வகையில் பரவலாக பகிரப்படுகின்றது.

குறித்த புகைப்படம் கென்யாவில் நிலவும் வறட்சியால் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள துயரை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

உணவு, தண்ணீரின்றி தவித்த ஒட்டகச்சிவிங்கிகள், அருகிலுள்ள ஏறக்குறைய வறண்ட நிலையில் இருந்த ஒரு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது சேற்றில் சிக்கி இறந்த பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நீர்த்தேக்க தண்ணீர் மாசுபடுவதை தடுக்க இவற்றின் உடல்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கென்யாவின் பெரும்பாலான இடங்களில் கடந்த செப்டம்பரில் இருந்து வழக்கமான மழைப்பொழிவில் 30 சதவீதத்துக்கு குறைவாகவே பெய்துள்ளது.

இதனால் இப்பிராந்தியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கால்நடை மேய்ப்பவர்களும் தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமின்றி தவிக்கும் நிலை உள்ளது.

#WorldNews

1 Comment

  1. Pingback: 26 வழக்குகளில் வெற்றி பெற்ற வக்கீல்! அம்பலமான உண்மை - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version