செய்திகள்

இராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்!

Published

on

இன்று இராமர் பாலத்தை இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் பார்வையிட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களை பார்வையிட்ட சீன தூதுவர் இன்று முற்பகல் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்படை படகில் ஒரு மணித்தியாலம் பயணித்த பின்னர் 17 கடல் மைல் தொலைவில் உள்ள இராமர் பால மணற்திட்டை சீன தூதுவர் பார்வையிட்டார்.

தூதரக பிரதிநிதிகள், இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version