செய்திகள்

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக முறைபாடுகள்!

Published

on

இலங்கையில் ஒரு நாளைக்கு 32 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகுவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இவ்வாண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 10,713 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் 5 வயதுக்கு குறைவான சிறுவர் துஷ்பிரயோக முறைபாடுகள் 1,632 உம், 6 தொடக்கம் 10 வயதிற்குட்பட்ட முறைபாடுகள் 2,626 உம் அடங்குகின்றன.

முறைபாடுகள் கிடைக்கப்பெறாத சம்பவங்கள் இதை விட அதிகமாக இடம்பெறலாம் என டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version