செய்திகள்
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன் அகற்றும் முதற்கட்ட பணி ஆரம்பம்!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களை அகற்றும் பணிகள் இரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
அதன் முதற்கட்டமாக கடலுக்கு அடியில் சிதறி கிடக்கும் கொள்கலன்களை அகற்றும் பணியை இன்றைய தினம் அமெரிக்க நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இடிபாடுகளை அகற்றும் பணியை எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் ஷாங்காய் சால்வேஜ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.
You must be logged in to post a comment Login