செய்திகள்
புலிகளின் துப்பாக்கியை விற்க முற்பட்டவர் மடக்கிப் பிடிப்பு!! – காரைதீவில் சம்பவம்
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றை 16 லட்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என அம்பாறை – காரைதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment Login