செய்திகள்

சுகாதார நடைமுறைகளால் பாடசாலை கொத்தணிகளுக்கு வாய்ப்பில்லை!

Published

on

சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் ஒழுங்காக பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நாட்டில் 4 மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 400 முதல் 500 பேரே கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளில் பாதிப்புக்கு உள்ளாகும் வீதம் குறைவு. இதுவரை பாடசாலை கொத்தணிகள் ஏதும் உருவாகவில்லை.

வீட்டுச் சூழலிலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version