செய்திகள்

சட்டவிரோத மின் இணைப்பால் உயிரிழப்பு!

Published

on

தலவாகலை தோட்டத்தின் கீழ் பிரிவில் சட்ட விரோதமாக இழுக்கப்பட்ட மின் கம்பியில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டிலிருந்தே இம் மின்கம்பி சட்ட விரோதமாக தோட்டத்துக்கு இழுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

காட்டு விலங்குகளிடம் இருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாக்கவே குறித்த கம்பி சட்ட விரோதமா தோட்டத்துக்கு இழுக்கப்பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version