செய்திகள்

குன்னூரில் உயிரிழந்த இராணுவத் தளபதி பாஜகவின் குரல் என விமர்சிக்கப்பட்டவர்!!!

Published

on

இந்தியப் பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரியான முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் நேற்று (08) இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு சுமார் 10 இலட்சம் வீரர்களை கொண்ட இந்திய இராணுவத்தின் தளபதியாக இவர் பணியாற்றியவர்.

மிகவும் வலிமையான இராணுவ வீரர் என்றும் , முன்னுதாரணமான இராணுவ தளபதியாகவும் 63 வயதாகும் பிபின் ராவத் அறியப்பட்டவர்.

அரசியல் நிலமைகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் சில நேரங்களில் சர்ச்சையையும் தோற்றுவித்திருந்தது.

1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதி உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்தவர் பிபின் ராவத்.

இவரது தந்தை இந்திய இராணுவத்தில் லெட்டினன்ட் ஜெனரலாக பணியாற்றியவர்.

அவரது தாய் ஒரு அரசியல்வாதியின் மகள். இவர் இராணுவ வீரராக பயிற்சி பெற்ற காலத்தில் முதன்மையான மாணவராக திகழ்ந்தார்.

பாதுகாப்பு தலைமை தளபதி அதிகாரியாக கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவத்திற்கு தலைமை தாங்கும் மற்ற நான்கு நட்சத்திர இராணுவ அதிகாரிகளை விட உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்த ஒருவரைத் தான் தற்போது இந்தியா இழந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தில் இராணுவ விவகாரத் துறைக்கு தலைமை தாங்கினார். அதுவரை பாதுகாப்புத் துறையுடன் இருந்த பொறுப்புகளை குறைத்தார்.

படைகள் தொடர்பான அனைத்து விடயங்களிலும் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை இராணுவ ஆலோசகராக இருந்தார்.

இந்திய இராணுவத்தின் 27வது தளபதியாக, டிசம்பர் 31, 2016 முதல் டிசம்பர் 31, 2019 வரை, ராவத் ஒரு இனிமையான நேராகப் பேசும் அதிகாரியாக அறியப்பட்டார்.

எதிர்கால போர்களுக்காக பொருத்தமானதாக இருக்க அவர் இராணுவத்தை மீண்டும் ஒழுங்கமைக்கவும், அதை உறுதியான படையாகவும் மாற்றுவதற்கான ஆய்வுகளைத் தொடங்கினார்.

மேலும் பிபின் ராவத் தனது 41 ஆண்டுகால இராணுவ வாழ்க்கையின்போது ​​கிழக்கில் உள்ள சரியான கட்டுப்பாட்டுக் கோடு, ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு இராணுவ பிரிவு மற்றும் வடகிழக்கில் ஒரு கார்ப்ஸ் ஆகியவற்றில் ஒரு இராணுவ பட்டாலியனுக்கு கொமாண்டராகவும் இருந்தார்.

அவர் லெப்டினன்ட் ஜெனரலாக மேற்குக் இராணுவத்திற்கு தலைமை தாங்கினார். பின்னர் துணை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

பிபின் ராவத் ஒரு மூத்த இராணுவ அதிகாரியாக, அவர் காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு பன்னாட்டுப் படைக்கு தலைமை தாங்கினார்.

உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விஷிஸ்ட் சேவா பதக்கம், யுஷ் சேவா பதக்கம், சேவா பதக்கம், வி.எஸ்.எம்., ராணுவ தலைமை தளபதி என இரண்டு முறை பாராட்டும் பெற்றவர்.

பாதுகாப்பு தலைமை தளபதியாக “ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு உரிய பயன்பாட்டை உறுதி செய்தல், கூட்டுத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் சேவைகளின் கொள்முதல், பயிற்சி மற்றும் செயல்பாடுகளில் அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்”

மற்றும் “ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உருவாக்கும்போது அதிகபட்சமாக உள்நாட்டு மயமாக்கலை எளிதாக்குதல், முப்படைகளுக்கான ஒட்டுமொத்த பாதுகாப்பு கையகப்படுத்தும் திட்டம் ஆகியவை அவரது முதன்மைப் பாத்திரங்களாகும்.

இவ்வாறான நிலையில் இந்திய இராணுவம் கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றின் இடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முப்படைகளின் தலைமைத் தளபதி எனும் பொறுப்பை வழங்கியது.

இதனால் பாதுகாப்பு படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும் இந்த புதிய தளபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தது.

இந்த பொறுப்புக்கு வந்தபொழுது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமாக இருப்பதாக அவர் மீது பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இருப்பினும் அக்குற்றச்சாட்டுகளை அவர் முற்று முழுதாக நிராகரித்திருந்தார்.

அத்துடன், அசாமில் இருக்கும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் கட்சி பெரும்பாலும் இஸ்லாமியர்களை கொண்டது.

இந்த கட்சி வளர்ந்து வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அப்பொழுது பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

ஆனால் பல்வேறுபட்ட பொறுப்புகள், ஆலோசனைகள் வழங்கக்கூடிய பாரிய பொறுப்பில் இருந்த ஒருவரை தற்போது இந்தியா இழந்திருக்கிறது.

அவருடைய இழப்பு இந்தியாவுக்குப் பேரிழப்பு தான்.


#India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version