செய்திகள்

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு ஒமிக்ரோன் தொற்று!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 9 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரோன் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. தென் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை கர்நாடகாவில் 2, மகாராஷ்டிராவில் 8, குஜராத் மற்றும் டெல்லியில் தலா 1 என 12 பேருக்கு ஒமிக்ரோன்தொற்று கண்டறியப்பட்டது.

இதேவேளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 9 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தென் ஆபிரிக்காவில் இருந்து ஜெய்ப்பூர் திரும்பியபிறகு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, நாகவுர் மாவட்டம் ரோஷிசா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பல நாடுகளை ஒமிக்ரோன் வைரசால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ள பட்டியலில் சேர்த்துள்ளது. அந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version